கும்பகோணம், மார்ச் 19 - தொழிலாளர்களின் உரி மையை பாதுகாத்திடவும் தொழிலாளர் விரோத ஒன்றிய அரசின் நடவடிக்கை களை கண்டித்தும் மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கும்ப கோணத்தில் நடைபெற்றது. அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு, ஏஐசிடியு, ஐஎன்டியூசி, எச்எம்எஸ், எம்எல்ஏப், ஏஏஎல்எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மார்ச் 28 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வர்களை ஒன்றிணைத்து கும்பகோணம் தபால் நிலையத்தில் மறியல் போ ராட்டம் நடத்துவது. மார்ச் 29 அன்று கும்பகோணம் ரயில் நிலையத்தில் சுமார் இரண்டாயிரம் தொழிலாளர் களைக் கொண்டு பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வது, முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி மாலை பொது வேலை நிறுத்தத்தை விளக்கி கும்பகோணம் பேருந்து நிலையத்தில் துண்டுப் பிர சுரங்கள் வழங்கியும், தொ டர்ந்து கும்பகோணம் காந்தி பூங்காவில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது என வும் முடிவு செய்யப்பட்டது.