கும்பகோணம், மார்ச் 22- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கும்பகோணம் வட்டம் நிர்வாகிகள் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டத் தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி வரவேற்றார். மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் 48 மணி நேர அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் வட்டக் கிளைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசப்பட்டது. அதில் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மார்ச் 28 ஆம் தேதி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெறும் தொழிற்சங்க மறியல் போராட்டத்தில் 500 ஓய்வூதியர்கள் பங்கேற்பது, மார்ச் 29 இல் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர் என அனைத்துப் பகுதி ஓய்வூதியர்களையும் இணைத்து திரளாக பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாவட்ட இணைச் செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆதரவு உரை நிகழ்த்தினார். முன்னணி உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். வட்ட துணைத் தலைவர் சொ.சண்முகம் நன்றி கூறினார்.