தஞ்சாவூர், பிப்.24- மின் பாதையில் மரக்கொக்கிகளைப் பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரி யம் உதவி செயற்பொறியாளர் சே.கமலக் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘‘பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வு அழுத்த மின் பாதையில் மரக்கொக்கிகள் ஆங்காங்கே பொது மக்களால் பொருத்தப்பட்டுள்ளன. மின் வாரிய உத்தரவின்படி, பொது மக்களின் பாதுகாப்பு கருதி விபத்தைத் தடுக்கும் வகையில் அதனை அகற்றும் வகையில், அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து, மின்வாரிய ஊழியர்கள் அதனை அகற்ற போர்க்கால அடிப்படையில் பணி மேற்கொண்டு நிறைவு பெற்றது. பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் மின் இணைப்பிற்கு மரக் கொக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இனிவரும் காலங்களில் மரக் கொக்கிகளைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அது தொடர்பான மின் இணைப்பு மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும்’’ எனவும் தெரிவித்துள்ளார்.