districts

img

தஞ்சாவூர் அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆவது பட்டமளிப்பு கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொ.சுப்பையா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினர்.