districts

img

முதியோர் பாதுகாப்பிற்கு தனி அலகு உருவாக்கப்படும் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தஞ்சாவூர், மே 19-  தெருவோரங்களில் ஆதர வின்றி வசித்து வருபவர்களை முதி யோர் இல்லங்களில் சேர்க்கவும், அரசு சார்பில் இல்லம் அமைக்கப் பட்டு அங்கு வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முதி யோர் பாதுகாப்பிற்கு என தனி அலகு உருவாக்கப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை வியாழனன்று அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய் தார். பின்னர், அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது;  “தஞ்சாவூரில், பணிபுரியும் பெண்களுக்கான விடுதி தமிழக முதலமைச்சரால், திறந்து வைக் கப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. அதனை செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும். பெண்கள் பாதுகாப்பிற்கான எண் 181 அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் துறை க்கு வரும் அழைப்புகள், புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக் கப்பட்டு, பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக் கப்பட்ட பெண்கள், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுகின்றனர். பணிபுரியும் இடங்களில் பெண் களுக்கு எதிரான பாலியல் சீண்டல் கள், வன்முறைகள் இருந்தால் இது குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில், அவர்களின் புகைப்படம், அடையா ளம், ஊர் பெயர் தெரியாத வண்ணம்  ஊடகத்துறையினர் செயல்பட வேண்டும். சட்டமும் அதைத் தான் சொல்கிறது. வாட்ஸ் அப் போன்ற வற்றிலும் புகைப்படங்கள் பகிரப்படு கின்றன. இது சட்டப்படியான குற்றம். குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஈடுபடுத்துவது குறித்து திட்டம் மே 24 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு வெளியிடப் படும். தமிழக அளவில் இதனை செயல் வடிவில் கொண்டு வருவ தற்கு அனைத்துத் துறை அலுவலர்க ளை கொண்டு கூட்டம் நடத்தப்படும். முதியோர் இல்லங்களை நடத்து வதற்கு தனியாரும் ஊக்குவிக்கப் படுவார்கள். அரசு சார்பிலும் முதி யோர் இல்லம் தொடங்கப்படும். தெருவோரங்களில் ஆதரவின்றி வசித்து வருபவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கவும், அரசு சார்பில் இல்லம் அமைக்கப்பட்டு அங்கு வைத்து பராமரிக்கவும் நடவ டிக்கை எடுக்கப்படும். முதியோர் பாதுகாப்பிற்கு என தனி அலகு உருவாக்கப்படும்’’ என்றார். முன்னதாக, பூதலுார் அருகே பாலையப்பட்டி சிறப்பு அங்கன்வாடி திறப்பு, பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, அரசு கூர்நோக்கு மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.  ஆய்வின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீல மேகம், ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.