தஞ்சாவூர், டிச.28- ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவக் கிட வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண் டும். வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்திட வேண்டும். கேங்மேன் பணியாளர் களுக்கு சட்டப்படியான சலு கைகள் வழங்கிட வேண்டும். அவுட்சோர்சிங் நடவடிக்கை களை கைவிட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜனவரி 10-ஆம் தேதி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தஞ்சா வூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், மின்சார தொழி லாளர் சம்மேளன மாவட்டச் செயலாளர் பொன்.தங்க வேலு தலைமையில் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட் டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி, மின் ஊழியர் மத் திய அமைப்பு மாவட்டச் செயலாளர் காணிக்கை ராஜ், சுந்தரராஜ், பொறியா ளர் சங்கம் பாரவேல், ஐக்கிய சங்கம் ராஜா, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் பூபதி, ஜனதா சங்கம் பஞ்சு, அண்ணா தொழிற் சங்கம் ராஜேந்திரன் ஆகி யோர் பேசினர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ராஜாராமன் நிறைவுரையாற்றினார். அனைத்து சங்க நிர்வாகிகள் மற்றும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.
கரூர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), ஐஎன்டியுசி, பொறியாளர் கள் சங்கம், ஏஐசிசிடியு, ஏஇஎஸ்யு, டிஎன்பிஏசிஎஸ்யு உள்ளிட்ட பல்வேறு சங்கங் களின் கரூர் மாவட்டக் கூட் டுக்குழுவின் சார்பில் கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற கூட்டத்திற்கு, கூட்டுக் குழுவின் மாவட்டச் செயலா ளர் எல்.முருகவேல் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாநில துணை தலைவர் ஜி.கோபா லகிருஷ்ணன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மண்டலச் செயலாளர் கே. தனபால், ஏஐசிசிடியு சங்க மாவட்டச் செயலாளர் ம. பால்ராஜ், ஐஎன்டியுசி மாவட்டப் பொருளாளர் பி. அக்னிஸ்வரன், பொறியா ளர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.முருகன், ஏஇஎஸ்யு சங்க மாவட்டச் செயலாளர் கே.வைரமுத்து, டிஇபிஏ சிஎஸ்யு சங்க மாநிலப் பொரு ளாளர் ஆர்.ராமதாஸ் ஆகி யோர் பேசினர். இதில் நூற் றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.