கும்பகோணம், ஜூலை 21- கும்பகோணம் அருகே மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் ஜூலை 18-ஆம் தேதி கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதில், கொளஞ்சிநாதன் உயிருடன் மீட்கப்பட்டார். ஆகாஷ், மனோஜ் ஆகியோ ரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாய மான ராஜேஷை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யா மொழி, நால்வரின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். பின்னர் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச் சர் கூறுகையில், வெள்ளக் காலங்களில் அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கும் எச்சரிக்கை களை கவனத்தில் எடுத்துக் கொண்டு நடக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கு வது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரை கலந்து பேசவுள்ளேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். சந்திப்பின்போது, அரசு தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.