districts

img

விருது பெற்ற காவலருக்கு டிஜிபி பாராட்டு

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும், முதல் நிலை காவலர் எஸ்.ராஜ்கண்ணன் என்பவர் 2015 ஆம் ஆண்டு, காவிரி ஆற்று கால்வாயில் அடித்து செல்லப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரை தன்னுயிரை பணயம் வைத்து உயிருடன் மீட்டார். இதற்காக 2019 ஆம் ஆண்டிற்கான பாரதப் பிரதமரின் உயிர் காக்கும் பணிக்கான காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக வழங்கப்படாமல் இருந்தது கடந்த மாதம் நேரடியாக அனுப்பப்பட்டது. பதக்கம் பெற்ற காவலர் ராஜ்கண்ணனை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்து கௌரவித்தார்.