districts

விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்

பட்டுக்கோட்டை, ஏப்.3-  தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில், விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில், வேளாண்மை உழவர் நலத்துறையினால் வேளாண் அடுக்கு திட்டம் துவங்கப்பட் டுள்ளது.  விவசாயிகள் ஒற்றைச் சாளர முறை யில் அனைத்து துறை சார்ந்த திட்டங்க ளுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசுத் திட்டங்களின் பலன்களை பெற்றுக் கொள்  ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு முறையும் விவசாயி கள் விண்ணப்பிக்கும் பொழுது தனித்தனி யாக ஆவணங்களை சமர்ப்பிக்க தேவை யின்றி எளிதில் திட்டப் பயன்களை பெற்றிட இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.  இவ்வாறு பதிவேற்றம் செய்யும் பொழுது நில விவரங்களுடன் இணைக்கப்  பட்ட விவசாயிகளின் விவரங்கள் கிரெய்ன்ஸ் (GRAINS) என்ற இணைய தளத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப் படும்.  இந்த இணையதளத்தில் விவசாயிகள் தங்களது விவரங்களை இணைத்திட ஆதார் நகல், விவசாயின் புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், மற்றும் நில உரிமை ஆவணங்களின் நகல்களை விவ சாயிகள் வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர்களிடமும், தோட்  டக்கலை துறையில் உதவி தோட்டக் கலை அலுவலர்களிடமும் அளித்து இணைத்துக் கொள்ளலாம் என பட்டுக்கோட்டை வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.