தஞ்சாவூர், டிச.12- கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - அகமதா பாத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட முது நிலை பிரிவு வணிக மேலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். ‘‘மேற்கு ரயில்வே அகமதாபாத் - திருச்சி பிரிவில் சிறப்பு ரயில்களை அறிவித்துள் ளது. இதன்படி (ரயில் எண்:09419 / 09420) அகமதாபாத்- திருச்சிராப்பள்ளி - அகமதா பாத் இடையே திருவிழா சிறப்பு கட்ட ணத்தில் இயக்கப்படுகிறது. இதில் ரயில் எண் :09419 அகமதாபாத்- திருச்சி சந்திப்பு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 2023 ஜன வரி 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமை களில் மட்டும் இயங்கும். இந்த ரயில் டிச.22 அன்று அகமதாபாத்தில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மெயின் லைன் வழியாக 24-ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு திருச்சி சந்திப்பை வந்தடையும். ரயில் எண்: 09420 திருச்சி - அகமதா பாத் சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து டிச.25-ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 29-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மெயின் லைன் வழியாக இரவு 9.15 மணிக்கு அகமதாபாத்தை சென்றடையும். இந்த ரயில்கள் வதோதரா, சூரத், வாபி வசாய் சாலை, கல்யாண், புனே, சோலாப் பூர், கல்புர்கி, வாடி, ராய்ச்சூர், மந்திரா லயம், குண்டக்கல், தடைபத்திரி, கடப்பா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல் பட்டு, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் ஆகிய நிறுத்தங்க ளில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு ஏசி 2- அடுக்கு பெட்டிகள், ஐந்து -ஏசி 3 அடுக்கு பெட்டி கள், 12 ஸ்லீப்பர் வகுப்பு, 4- பொது 2 ஆம் வகுப்பு மற்றும் 2 - பொது 2ஆம் வகுப்பு என மொத்தம் 24 பெட்டிகள் இருக்கும்” என தெரிவித்தார்.