districts

பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.29 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் கிளையின் ஏழாவது  ஆண்டுப் பேரவை மாவட்ட தலைவர் எம்.முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் சி.கணேசன் வரவேற்றார். மண்டலச் செயலாளர் ஜி.பஷீர்  பேரவையை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், மாவட்டத் தலைவர்  கலியமூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் எஸ். ராஜாராமன், மாவட்டத் தலைவர் ஏ.அதி தூத மைக்கேல் ராஜ், மாவட்டச் செயலா ளர் பீ.காணிக்கைராஜ், மாவட்டப் பொருளா ளர் எஸ்.சங்கர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டை நிறைவு  செய்து, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில செயலாளர் எஸ்.கணேசன் சிறப்புரையாற்றினார்.  பேரவையில் தலைவராக எம்.முனி யாண்டி, செயலாளராக டி.கோவிந்தராஜு, பொருளாளராக வி.காமராஜ், துணைத் தலை வர்களாக ஆர்.மேகநாதன், த.கோவிந்த ராஜ், ஆர்.சிங்காரம், எஸ்.பெரியசாமி ஆகி யோரும், இணைச் செயலாளர்களாக சி.கணேசன், எஸ்.பவுல்ராஜ், ஆர்.தியாக ராஜன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். மின்துறையை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும், மின்சார சட்டத் திருத்தம்  2022-ஐ திரும்பப் பெற வேண்டும், புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.