தஞ்சாவூர், மார்ச் 5- தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டை யில் நடைபெற்று முடிந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். இந்தப் போட்டியில் 652 காளைகள் பங்கேற்றன. 370 வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை வரு வாய் கோட்டாட்சியர் ரஞ்சித் துவக்கி வைத் தார். பின்னர் வாடிவாசலில் இருந்து ஒவ் வொரு காளைகளாக அவிழ்த்து விடப் பட்டது. ஒரு காளையை ஒரு வீரர் பிடித்தால் மட்டுமே வீரர் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் அதன் உரிமையாளர்கள் பெற்று கொண்டனர். காளைகளை அடக் கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், எவர்சில்வர் குடம், குவளை உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் உடனுக்கு டன் வழங்கப்பட்டன. காளைகளை அடக்க முயன்ற ஒன்பது வீரர்கள், 16 காளை உரிமையாளர்கள், ஒரு பார்வையாளர் என 26 பேர் காயமடைந்தனர். 12 பேர் உள்நோயாளிகளாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சொக்கத்தங்கம் பலி
அரியலுார் மாவட்டம் வெங்கனூர் கிரா மத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது காளை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. இந்தக் காளை எதிர்பாராதவித மாக மாதாக்கோட்டை பைபாஸ் பாலத்தின் மேலிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து காளை உரிமையாளர் முத்துக்குமார் கூறும் போது, காளைக்கு சொக்கத்தங்கம் என பெயரிட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக பிள்ளை போல வளர்த்து வந்தேன். இது வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட போட்டி களில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்கி உள்ளது. இந்தப் போட்டி யிலும் வெற்றி பெற்று இரண்டு பரிசு களை வென்றது. இந்த நிலையில் காளை, பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தது, எங்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.