districts

img

ஒன்றிய அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்படுமா? சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மே 31-  சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கிட்டு உடனே தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். போலியான வியாபாரிகளை நீக்கிவிட்டு, விடுபட்ட வியாபாரிகளை சேர்க்க வேண்டும். வியாபாரிகளை உள்ளடக்கிய நகர விற்பனை குழுவை அமைக்க வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வங்கி கடன் தொகையை வழங்க வேண்டும். எவ்வித காரணமுமின்றி சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தரைக்கடை சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மணிமாறன் தலைமை வகித்தார். தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் மில்லர் பிரபு, மாவட்டப் பொருளாளர் ஏ.ராஜா, மாவட்ட நிர்வாகிகள் டி.சார்லஸ், ஏ.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், ஆட்டோ சங்க நகரச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாநகராட்சி ஆணையரிடம் நேரில் வழங்கினர்.