districts

மானாமதுரை: நூலகம் அமைத்துத்தர கோரிக்கை

சிவகங்கை, பிப்.25-  சிவகங்கை மாவட்ட மானாமதுரை தாகியார் நகர் பகுதியில் பகுதி நேர நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இப்பகுதி வாலி பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் நூலகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டாக்டர் அப்துல் கலாம் இளை ஞர் மன்றத்தின் சார்பாக ரூ. 6 ஆயிரம் 5.8.2013 ஆம் ஆண்டு மானாமதுரை கருவூலத்தில் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. சுமார் நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர் ,மாவட்ட நூலக அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட உயர் அதி காரிகளுக்கும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பி னர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களுக்கும் மனுக்கள் அளித்து வருகிறார்கள். நூலகம் அமைப்பதற்கு கிராம  நிர்வாக அலுவலர் நிலம் ஒதுக்கிக் கொடுத் துள்ளார். பகுதி நேர நூலகம் தொடங்குவதற்கு அனு மதி கொடுத்துவிடலாம். ஆனால் இதற்கான சென்ட்டிரிங் கட்டடம் தேவை .அதை அமைத்துக்  கொடுத்தால் கிராமப்புற பகுதிநேர நூலகம் உடனே தொடங்கலாம் என மாவட்ட மைய நூலக அதிகாரி தெரிவித்துள்ளார் என்றும் மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்  குமாரும் நூலகம் அமைத்துத்தர ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார் என்றும் நற்பணி மன்ற நிர்வாகி சிதம்பரம் கூறினார். கட்டிடம் கட்டுவதற்கு குறைந்தபட்ச தொகை ரூ.5 லட்சம் தேவை. இந்த  நிதியை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கித்தர வேண்டும்  என்று வலியுறுத்தி மனு கொடுத்துள்ளனர்.