மயிலாடுதுறை, ஜன. 9 - மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் அருகேயுள்ள மேலஅகரம் என்கிற கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தினரின் குடி யிருப்புகளையும் அதைச் சுற்றியுள்ள திடல் பகுதியையும் பாமக பிரமுக ரும், கள்ளச் சாராய வியாபாரியுமான ஒருவர் முறைகேடான ஆவணங்களை கொண்டு, வட்டாட்சியரின் உதவியு டன் சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த ஏழை குடும்பத் தினரை ‘குடிசையோடு தீயிட்டு கொளுத்தி விடுவேன்’ என மிரட்டி வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி வட்டம், கொள்ளிடம் ஒன்றியம் ஆச்சாள்புரம் ஊராட்சி, மேலஅகரம் கிராமத்திலுள்ள ஏழு பிடாரியம்மன் ஆலயம் அருகில் ஐந்து தலைமுறையாக வசித்து வரு கிற (சீனு படையாச்சி குடும்பத்தினர் என அழைக்கப்படுகின்றனர்) தங்க வேல் என்பவரின் மகன்களான பெரு மாள் (85), கிருஷ்ணமூர்த்தி (78), கண பதி (70), ராஜேந்திரன் (60), பால சுப்ரமணியன் (58) மற்றும் அவர்க ளது வாரிசுகள், அந்த இடத்திலேயே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர்.
அன்றாடம் விவசாய கூலி வேலை செய்து வரும் அந்த குடும்பத்தினர், அதே பகுதியில் பல ஏக்கர் நிலங்க ளில் விவசாயம் செய்து வந்த செல் லையாப்பிள்ளை என்பவரிடம், பண்ணையாட்களாக சீனு படையாச்சி என்கிற தங்கவேலுவின் தந்தையார் தொடங்கி பல ஆண்டுகளாக வேலை செய்ததால், உழவடை பாத்தி யம் என்று கூறப்படுகிற பங்காக 240 குழி இடத்தை செல்லையாப்பிள்ளை அந்த குடும்பத்திற்கு வழங்கியிருக் கிறார். அந்த இடத்தில் குடிசை வீடுகளை கட்டிக்கொண்டும், ஆடு-மாடு, கோழிகளை வளர்த்துக் கொண்டும் செல்லையாப்பிள்ளையின் நிலங்க ளில் பண்ணையாட்களாகவே தலை முறை தலைமுறையாக வேலை செய்து வந்துள்ளனர். தங்கவேலு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினரும் செல்லையாப் பிள்ளையின் பண்ணைக்கு விசுவாச மாக உழைத்து வந்த நிலையில், கடந்த 2017 இல் அருகிலுள்ள மகேந்திரப்பள்ளி மேலத்தெருவில் வசிக்கும் கள்ளச் சாராய வியாபாரி யும், பாமக பிரமுகருமான சிவபாலன் (49) என்பவர், தங்கவேலுவின் மகன்கள் வசிக்கும் இடத்தை அபகரிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, தனது இடத்தை ஆக்கிரமித்து விட்டதாக பொய்யான புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்திருக்கிறார். செல்லையாப்பிள்ளையின் வாரிசுகள், “நீங்கள் வசிக்கும் இடங் களை தன்னிடம் விற்றுவிட்டதாக” கூறி தொடர்ந்து அப்பாவி குடும்பத் தினரை மிரட்டி வந்துள்ளார்.
அத் துடன், 2019 இல் சட்டவிரோதமாக முறைகேடான ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவும் செய்திருக் கிறார். சார்பதிவாளரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிவபாலனின் முறைகேடு களுக்கு துணையாக செயல்பட்டிருக் கிறார். இதற்கு முன்னதாகவே சிவ பாலனின் முறைகேடுகளுக்கு எதிராக தங்கவேலுவின் வாரிசுகள் 2018 இல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தனர். இந்த வழக்கை சிவபாலன், பண பலத்தாலும் தில்லுமுல்லு செய்தும் முறையாக நடத்தவிடாமல் குறுக்கீடு செய்திருக்கிறார். வயதான தங்கவேலுவின் மகன்க ளையும், அவர்களுடைய வாரிசு களையும் நாள்தோறும் மிரட்டிக் கொண்டு, இரவில் அடியாட்களுடன் குடிசைகளை சுற்றி நின்று ஆபாசமாக திட்டி பேச வைப்பதுமே தொடர்கிற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இப்பிரச்சனை வந்தது. உடனே கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த போது, கண்ணீர் மல்க அந்த வயதான முதிய வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கூறுகையில், “எங்க தாத்தா சீனு படையாச்சி தொடங்கி, எங்க அப்பா தங்கவேலு, நாங்க என தலைமுறை தலைமுறையாக இதே இடத்தில தாங்க இருக்குறோம். மகன்கள் 7 பேரும், மகள் ஒருவர் என 8 பேர். நாங்க எங்கள் வாரிசுகளை சேர்த்து 30 பேர் எங்க குடும்பத்தில இருக் கோம். இலங்கை யாழ்பாணத்திலிருந்து சிதம்பரம் சிவபுரி மடத்திற்கு வேலைக்கு வந்த செல்லையா புள்ளைக்கு, இந்த ஊருல ஒரு 30 ஏக்கர் இருக்கும். அந்த எல்லா நிலத் தையும் உழுது பயிரிட்டு அறுவடை செய்து செல்லையா பண்ணைக்கு தந்தது எங்க குடும்பம்...” என்று வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே தொடர்ந்து பேசினார்.
“எங்களுக்கு வீடு இல்லனு, 240 குழி இடத்தை உழவடை பாத்திய மாக எங்களுக்கு தந்த இடத்தில் வீடு கட்டி காலங்காலமாக வசிக்கிறோம். ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, கரண்டு பில் அப்புறம் எல்லாத்துலயும் இந்த அட்ரஸ்தான் இருக்கு. தென்னை மரம், பனைமரம், பழமையான சிவன் கோயில் இருக்கு. கெவர் மெண்ட் தெருவெளக்கு அமைச்சு கொடுத்திருக்கு, ரோடு போட்டு ருக்கு, பாத்ரூம் கட்டி தந்திருக்கு. அப்புறம் எப்படிங்க இது எங்க இடம் இல்லனு அந்த சிவபாலன் சொல்றாரு? அவருதான் அடியாள வச்சி மிரட்டுறாரு, ராத்திரில வீட்ட சுத்தி ஆளுங்கள வெச்சி வீட்ட கொ ளுத்திடுவேனு சொல்றாரு. அந்த போலிஸ்காரங்களும் அடிக்கடி வரு வாங்க. வயசானவங்கனுக்கூட பாக்காம கன்னாபின்னானு பேசுறாங்க. பயத்து லயே தூக்கமில்லாமல், வேலக்கி போக முடியாம தவிக்கிறோம் என்றார் கண்ணீருடன்.
ஜன.10 சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏ.வி.சிங்காரவேலன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தர லிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் எம்.தியாகராஜன், ஆர்.நடரா ஜன், கிளை செயலாளர் அன்பழகன், கீழஅகரத்தை சேர்ந்த கட்சியின் மூத்த உறுப்பினர் புலவர் என்கிற ஆறு முகம் ஆகியோர் ஆய்வு செய்த பிறகு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “காலங்கா லமாக உழைத்த குடும்பத்திற்கு பங்காக வழங்கிய 240 குழி இடத்தை யும் அபகரித்துக் கொள்ள, பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய கள்ளச்சாராய வியாபாரியான பாமக பிரமுகர் சிவபாலன், முறைகேடாக ஆவணங்களை தயார் செய்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
இதுமட்டுமின்றி, தொ டர்ந்து அப்பாவி ஏழை குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார். முறைகேடுகளுக்கு துணையாக வட்டாட்சியரும், காவல்துறையின ரும் இருப்பது கண்டனத்திற்குரி யது. இரண்டு மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துக் கொண்டு அன்றாட உணவுக்கே கடும் சிரமத்தி லுள்ள குடும்பத்தின் வீடுகளையும், வீட்டை சுற்றியுள்ள திடல் பகுதியை யும் அபகரிக்க முயற்சி செய்பவர் மீதும், உறுதுணையாக நிற்கிற அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாக மும், மாவட்ட காவல்துறையும் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும். சிவபாலன் என்ப வர் இது போன்று பல இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதுகுறித்தும் விசார ணையை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சனை சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போதும், அராஜகமான முறை யில் செயல்படும் சிவபாலன் மீதும், முறைகேடுகளுக்கு ஆதரவாக உதவிய வருவாய்த்துறை, காவல்துறை அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டுமென மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் கூறியுள் ளார். இச்சம்பவத்தை கண்டித்து ஜன. 10 (திங்கள்கிழமை) அன்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. (ந.நி)