districts

img

மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க கோரி சிபிஎம் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர், மார்ச் 17- விஷ்ணுவாக்கம், பேரத்தூர் கிராமங்கள்  நிறுத்தப்பட்ட  மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (மார்ச் 17) திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணு வாக்கம், பேரத்தூர் ஆகிய கிராமங்கள் வழியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட  வேண்டும் என பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2012 முதல் 2015 வரை இயக்கப்பட்டு வந்ததால் திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு.   மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என  அனைவரும் பயனடைந்தனர். பின்னர்  முன்னறிவிப்பின்றி திடீரென பேருந்துகள்  நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து  வசதிகள் இன்றி மக்கள் அவதிப்படு கின்றனர். இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (மார்ச்17) திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  மாநகர போக்குவரத்து ஆவடி மண்டல அதி காரி எட்வர்ட் தனியார் பேருந்து முதலாளி  போல, பேருந்துகள் இயக்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்த அணுகுமுறையை கண்டித்தும் பேருந்துகளை இயக்ககோரி பேருந்துகள் சிறை பிடிக்கும் போராட்டம் நடத்துவோம் என தலைவர்கள் எச்சரித்தனர்.  இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மதியழகன் தலையிட்டு அடுத்த ஒரு வாரத்தில் அந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தனர். இதன் பின்னர் போராட்டம்  முடிவிற்கு வந்தது. கட்சியின் திருவள்ளூர் வட்டக் குழு உறுப்பினர் எஸ்.கலையரசன்  தலைமையில் நடைபெற்ற முற்றுகை  போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலா ளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், இ.மோகனா, மூத்த தலைவர் கே.செல்வ ராஜ், வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்ட குழு உறுப்பினர் கே.முருகன், முன்னணி ஊழியர்கள் ஏ.சுதாகர், ராஜேஷ், சந்துரு, ஒய்.சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.