districts

எலெக்ட்ரிக்கல் கடையில்  ரூ.8 லட்சம் கொள்ளை

சேலம், பிப்.12- சேலம் அஸ்தம்பட்டி அடுத்த மரவனேரி 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பர் லால் (63). இவர் சேலம் பள்ளப்பட்டி அர்த்தனாரிநகர் பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு  கடையை பூட்டி விட்டு சென்றார். இதை யடுத்து விஸ்வாம்பர் லால் நேற்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் இருந்த ஜன்னல் உடைக்கப் பட்டிருந்தது. மேலும் வங்கியில் செலுத்து வதற்காக வைத்தி ருந்த ரூ.8 லட்சம் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வாம்பர் லால் பள்ளப்பட்டி காவல்நிலை யத்திற்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கெள்ளை யர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை. ஆனா லும், கடையின் பக்க வாட்டில் உள்ளஜன்னலை உடைத்து  கடைக்குள் நுழைந்து, கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவான கைரேகைகளை ஆய்வு செய்த னர். ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.