ராணிப்பேட்டை, நவ. 8- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குளத்தேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. விவ சாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலத்தின் சிமெண்ட் தரை உடைந்து சேதமடைந்து பல மாதங்களாகி யும் சீரமைக்காமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.