அவிநாசி, செப்.16- அவிநாசி அருகே வடுகபாளையத்தில் பழுதடைந்த கழிப் பிடத்தை சீரமைக்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வடுகபாளை யம் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் கடந்த 2004 - 2005 ஆம் ஆண்டு அரசு நிதியில் பெண்க ளுக்கான பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது, இக் கழிப்பிடத்தில் உள்ள கதவுகள், ஜன்னல்கள் மிகவும் பழுத டைந்து காணப்படுவதால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இக்கழிப்பிடத்தை சீரமைத்து தரக் கோரி வியாழனன்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனோக ரனிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். இம்மனுவினை மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தேவி, நிர்வாகிகள் செல்வி, சித்ரா, லதா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற உறுப்பி னர் ராமசாமி ஆகியோர் அளித்தனர்.