districts

img

வ.உ.சி. வாழ்க்கை வரலாறு நகரும் புகைப்படக் கண்காட்சி புதுக்கோட்டை வருகை

புதுக்கோட்டை, ஏப்.26 - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த  நகரும் புகைப்படக் கண்காட் சியினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திங்கள்கிழமை ஆட்சி யரகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் தெரி விக்கையில், இந்த நகரும் புகைப்படக் கண்காட்சியில் வ.உ.சிதம்பரனாரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் உள்ள வாழ்க்கை குறிப்பு கள், வரலாறுகள், சுதந்திரப்  போராட்ட தியாகங்கள், நிகழ்வுகளின் செக்கி ழுத்தல் உள்ளிட்ட பல்வேறு  தகவல்கள் இடம் பெற்றுள் ளன. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள இந்த நகரும் புகைப்படக் கண்காட்சியினை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, வ.உ. சிதம்பரனாரின் வீர வர லாற்றையும், தியாகங்களை யும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.