districts

img

ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வாலிபர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை, மே 31 - ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு  துணைபோகும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக் கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வெண் ணாவல்குடி ஊராட்சி செயலாளர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், ஊராட்சி செயலாளர் மீது  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, தவறு செய்த ஊராட்சி செயலாளர் மீது உறுதியான நடவ டிக்கை எடுப்பதோடு, ஊழலுக்குத் துணைபோகும் வட்டார வளர்ச்சி அலு வலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும்  துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார  வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் ஏ.குமாரவேல் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் பி.விமல்துரை மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்த னர். கோரிக்கைகளை விளக்கி வாலிபர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கருணா, கீரமங்கலம் பேரூராட்சி கவுன் சிலர் ஆர்.ஜி.பாலா கண்டன உரை யாற்றினர்.  போராட்டத்தைத் தொடர்ந்து ஆலங் குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, காவல் துணை கண்காணிப்பாளர் வடி வேல் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை யில், குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளவர் கள் மீது உரிய விசாரணை நடத்தி நட வடிக்கை எடுக்க அதிகாரிகள் ஒப்புதல்  அளித்தனர். இதனை தொடர்ந்து போ ராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.