அறந்தாங்கி, நவ.29- தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றியம் வாரியாக மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவை யான உதவி உபகரணங்கள் மற்றும் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது. அதனொரு பகுதியாக, மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திற னாளி களுக்கான சிறப்பு முகாமில் ஒன்றியக் குழு தலைவர் பரணி கார்த்தி கேயன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக் கான உதவி உபகர ணங்களை வழங்கினார். மருத்துவர்கள் பரிசோத னைக்குப் பிறகு மாற்றுத்திற னாளிகளுக்கு வீல்சேர், கைத்தாங்கி, செவித்திறன் இயந்திரம் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட் டன. இதில் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயனடைந்த னர். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் உல கநாதன், மனநல மருத்து வர் சுந்தரமூர்த்தி, மருத்து வர்கள் விஜய் ஆனந்த், சூலைத்கான், அனைத்து மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க மாவட்ட தலைவர் தங்க வேல், தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.