புதுக்கோட்டை, டிச.4- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவு வதற்கு பரிந்துரை கடிதம் அளிக்க வலி யுறுத்தி திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, திக, தேமுதிக, மனித நேய மக்கள் கட்சி, சிபிஐ(எம்.எல்), பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘‘அறந்தாங்கி நகரம் செக்போஸ்ட் அருகே சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ சிலையை நிறுவிட வலியுறுத்தி கடந்த 09.02.2006 அன்று எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் அனுமதி கோரப்பட்டது. அரசு விதித்த நிபந்தனைகள் அனைத் தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறந்தாங்கி நகர்மன்றத் தீர்மானம், சிலை அமைய உள்ள இடத்தின் வரைபடம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை வழங்கிய தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுநாள் வரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அம்பேத்கர் சிலை அமைப் பதற்கான பரிந்துரைக் கடிதத்தை அரசுக்கு அனுப்பவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை வலியுறுத்தப்பட் டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த 23.11.2022 அன்று புதுக்கோட் டையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொது கணக்குக்குழு கூட்டத்திலும் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டுமென சட்டப்பேரவை குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், சிலை அமைப்புக் குழு வின் சார்பில் வெள்ளியன்று அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அறந் தாங்கியில் சிலை அமைக்க மாவட்ட ஆட்சி யர் அரசுக்கு உடனடியாக பரிந்துரைக் கடிதம் அனுப்ப வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிலை அமைப்புக்குழுத் தலைவர் கே.எம். சுப்பையா தலைமையில் நடைபெற்ற மனு அளிக்கும் குழுவில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன், விசிக மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, மாவட்டச் செயலாளர் செப.பாவாணன், முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.