புதுக்கோட்டை, ஜூன் 14 - குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமா வின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரில் தமிழக அரசு ஆண்டுதோறும் குழந்தை எழுத்தாளர்களுக்கான விருது வழங்க வேண்டுமென தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13 ஆவது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன், துணைத் தலைவர் ராமா ராமநாதன், செயற்குழு உறுப்பினர் மு.கீதா ஆகி யோர் தலைமை வகித்தனர். கவிபாலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வர வேற்புக்குழு செயலாளர் கி.ஜெயபா லன் வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் வெண் புறா உரையாற்றினார். வேலை அறிக் கையை செயலாளர் சு.மதியழகன், கலை இலக்கிய அறிக்கையை துணைத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், வரவு- செலவு அறிக்கையை துரை.அரி பாஸ்கர் ஆகியோர் முன் வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநிலக் குழு உறுப்பினர் ஜீவி, மாநில துணைச் செய லாளர் ஆர்.நீலா, கவிஞர் மு.முகேஷ், மரு.நா.ஜெயராமன் ஆகியோர் பேசி னர். மாநாட்டில் செயலாளராக எம்.ஸ்டா லின் சரவணன், தலைவராக ராசி.பன்னீர் செல்வன், துணைத் தலைவர்களாக சு.மதியகழன், மு.கீதா, கவிபாலா, காசாவயல் கண்ணன், துணைச் செய லாளர்களாக துரை.அரிபாஸ்கர், சு.பீர் முகமது, நேசன்மகதி, இந்தியன் கணே சன், பொருளாளராக கி.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர்களாக ரமா ராம நாதன், எஸ்.இளங்கோ, ரெ.வெள்ளைச் சாமி, சாமி.கிரீஷ், உஷாநந்தினி, கவி கார்த்திக் உள்ளிட்ட 41 பேர் கொண்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைச் செயலாளர் ஸ்ரீரசா உரையாற்றினார். மாநாட்டில் ‘படைப்பின் அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் சிறப்புரையாற்றி னார். அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டா லின் சமீபத்தில் புதுக்கோட்டை வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த புத்தகம் குறித்து மத அடிப்படை வாதிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். ஒருவர் தான் விரும்பிய புத்தகத்தை மற்றவர்களுக்கு பரி சளிப்பது அவரவர் உரிமை. அவற்றை சர்ச்சையாக்கி பிரச்சனையை கிளப்பு வது கண்டிக்கத்தக்கது. பொது அறிவை வளர்க்கும் நூலகங் களில் போதுமான இடவசதியை ஏற்படுத் துவது, பள்ளி, கல்லூரி மாணவர்களை நூலகங்களில் உறுப்பினராக்குவது, வாசகர் வட்டங்களை மேம்படுத்துவது, நூல் அறிமுக விழாக்களை நடத்துவது, மாணவர்களுக்கான கண்காட்சியை நூலகத்துறை நடத்துவது. புதுக்கோட்டை மாவட்டம் அரி மளத்தைச் சேர்ந்த குழந்தை எழுத்தா ளர் வாண்டு மாமாவின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதை அடுத்து, அவ ரது பெயரில் குழந்தை எழுத்தாளர் களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும். அண்ணா மறு மலர்ச்சி நூலகங்களை மீண்டும் இயங்க செய்ய வேண்டும். ஊராட்சிகள் தோறும் திறந்தவெளி விளையாட்டு மைதானங் கள் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தமிழகத்தின் முதல் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளரு மான அகிலன் பெயரில் விருது வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் பழம் பெரும் நடிகர் பி.யு.சின்னப்பா நினைவு கலை மண்டபம் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட மைய நூல கத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை நகர்மன்றத் தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்து வதற்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.