districts

img

30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பிரச்சனை எம்.சின்னத்துரை எம்எல்ஏ முன்னிலையில் தீர்வு

புதுக்கோட்டை, பிப்.1- கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கிடைக்காமல் அவ திப்பட்டு வந்த உடையநேரி காலனி மக்களுக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திங் கள்கிழமையன்று தீர்வு காணப்பட் டது. 1969-ஆம் ஆண்டு இலங்கை மலை யகத் தமிழர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டு பல்வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அதன்படி புதுக்கோட்டையை அடுத்த உடையநேரியில் பகுதியில்  அரசால் இடம் ஒதுக்கிக் கொடுத்து குடியமர்த்தப்பட்டனர். இலங்கையில் குளிர்பிரதேசத்தில் வசித்து வந்த அவர்களால் வெப்பம் நிறைந்த சம வெளிப்பகுதிகளில் வசிக்க முடிய வில்லை. மேலும், அவர்களுக்கு பழகி யிருந்த தேயிலைத் தோட்ட வேலை களைத் தேடி தமிழ்நாட்டில் உள்ள மலையகப்பகுதிகளுக்கு குடி பெயர்ந்துவிட்டனர். இந்நிலையில், பயன்பாடற்ற மேற்படி இடத்தில் அருகில் உள்ள  நந்தனவயல், பரிசக்கல், பள்ளத்து வயல், திருவரங்குளம், ஆலங்குடி உள்ளிட்ட காலனிப் பகுதிகளில் வசித்து வந்த ஏழை, எளிய மக்கள் குடிசைபோட்டு குடியேறினர். காலப்போக்கில் புதுக்கோட்டை நக ரத்தின் விரிவாக்கம் அதிகரிக்கும் போது உடையநேரிப் பகுதியிலும் குடி மனைகளுக்காக விலை அதிகரித்தது. இதனால், மேற்படி இடங்களை ரியல் எஸ்டேட் கும்பல் வளைத்துப்போடத் திட்டமிட்டனர். அதிகாரிகளின் உதவி யோடு போலியாக பத்திரப் பதிவு செய்து பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை மக்களை மிரட்டி அப்பு றப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி னர்.

சிபிஎம் - மாதர் சங்கம் தலையீடு
இந்நிலையில்தான் மேற்படி பிரச்சனை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வேண்டி பல கட்டப் போராட் டம் நடைபெற்றது. மேற்படி உடைய நேரி மக்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் உள்ளிட்டோர் கடந்த காலங்க ளில் சந்தித்து தங்களது ஆதர வினைத் தெரிவித்துள்ளனர்.

காத்திருக்கும் போராட்டம்
பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை உணராமல் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே ரியல் எஸ்டேட் கும்பலின் மிரட்டலும் அதிக ரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து உடையநேரி பகுதி மக்களுக்கான மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஜன.31 அன்று கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பாக இப்போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டது.

சமாதானப் பேச்சுவார்த்தை
திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபி நயா தலைவர்களை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தி ருந்தார். இதனையடுத்து புதுக் கோட்டை கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை வட்டாட்சி யர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்பு மணவாளன், ஒன்றியச் செயலாளர் டி.லெட்சாதிபதி. ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி, தலைவர் பி.சுசீலா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி. மாரிக்கண்ணு, வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வெள்ளை யராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகள் ஏற்பு
பேச்சுவார்த்தையில், உடைய நேரி காலனி பகுதியில் வீடுகட்டி குடியிருந்துவரும் நபர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்கில் அரசு சார்பில் ஆஜராகி, பட்டா வழங்க நட வடிக்கை எடுப்பது. உடையநேரிப் பகுதியில் அடுத்த மூன்று தினங்க ளுக்குள் தெருவிளக்கு அமைத்துக் கொடுப்பது எனவும், அடுத்த ஒரு வார காலத்திற்குள் அனைத்து வீடு களுக்கும் குடிநீர் வசதி செய்து தரப் படும் எனவும், அனைத்து வீடு களுக்கும் நிபந்தனையின் அடிப்படை யில் வீட்டு ரசீது மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது எனவும், மார்ச் மாத இறுதிக்குள் சாலை வசதி ஏற்படுத்தித் தருவது எனவும் அதிகாரி களால் உறுதியளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை முடிவை காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மக்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடைசிவரை களத்தில் நின்று போரா டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.