districts

மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது நிச்சயம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை,அக்.6- தமிழகத்தில் மதுக்கடை களை படிப்படியாக குறைப்பது நிச்சயம் என்று சட்டத்துறை அமை ச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை அடுத்த அகரப்பட்டி மற்றும் பெருமாள் பட்டி பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஞாயிறன்று திறந்து வைத்தார். 

இதைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கூறவில்லை. படிப்படியாகத்தான் மது விலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறியிருந்தோம். ஆட்சிக்கு வந்த பின் சொன்னபடி 500 கடைகளை நாங்கள் குறைத்துள்ளோம். இருப்பினும் பூரண மதுவிலக்கு என்பதே எங்களது லட்சியம். படிப்படியாக மது கடைகளை குறைப்பது நிச்சயம்.

யாரும் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. கூட்டணிக் கட்சி தலைவர்கள் எல்லோரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தோழமையோடு தான் பழகுகின்றனர்.

மற்ற அரசியல் கட்சிக்கு மாற்றாக எங்கள் கட்சி இருக்கும் என்று விஜய் சொல்கிறார். புதி தாக அரசியல் கட்சி ஆரம்பிக் கின்றவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களைதான் விஜய்யும் கூறுகிறார். 

எங்களைப் பொறுத்தவரை எங்கள் பாதை,எங்களது பயணம், எங்களது இலக்கில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். 2026 எங்களது இலக்கு. 234 என்பது லட்சியம், 200 நிச்சயம்.

சாதிவாரி கணக்கெடுப்பு எடு

இவ்வவாறு அமைச்சர் தெரிவித்தார்.க்க வேண்டும் என்று நாங்கள்தான் கேட்டுள்ளோம். தேர்தல் வாக்குறுதியிலும் கொடுத்துள்ளோம். அதை தேசிய வாரியாக எடுத்தால்தான் சரியாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துதி வருகிறோம்.