புதுச்சேரி, ஜன. 3- புத்தாண்டு பொங்கல் விழாவையொட்டி வணிகர் சங்கங்களுடன் அரசு சுற்று லாத்துறை இணைந்து புதுச்சேரி யில் வணிகர் திருவிழா ஜனவரி 5 முதல் பிப்ரவரி 20 வரை நடை பெறுகிறது. புதுச்சேரி வணிகத் திருவிழாவின் முதலாவது செயற்குழு கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் செவ்வாயன்று (ஜன. 3) நடைபெற்றது. இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஆட்சியர் வல்லவன், காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர், காவல்துறை ஆய்வாளர் ஜெனரல் சந்திரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, சுற்றுலாத் துறை இயக்குநர் பிரியதர்ஷினி, போக்கு வரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் புதுச்சேரி வணிகர் சங்கத்துடன் இணைந்து வணிகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், விழாவிற்கான ஏற்பாடு கள் குறித்தும் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. புதுச்சேரி நேரு வீதி, அண்ணா சாலை, ரெட்டி யார் பாளையம் சாலை மற்றும் காரைக்கால் பாரதி வீதி ஆகிய இடங்களில் நுழைவு வளைவுகள் அமைப்பது, அலங்கார மின் விளக்குகள் அமைப்பது, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் பதாகை கள் அமைப்பது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, தேவை யான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.