பெரம்பலூர், ஜூன் 14 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி லெப்பைகுடிக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காடு தடுப்பணை பகுதியில் வெள் ளாற்றில் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவங்கி உள்ளது. எங்கள் ஊரில் சுமார் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் குறுகிய நிலப்பரப்பில் வசித்து வருகிறோம். எங்கள் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற 3 குடிநீர் கிணறு களும், 17-க்கும் மேற்பட்ட மினி வாட்டர் டேங்க் அமைத்தும், அதில் தற்போது ஒன்றை மட்டுமே உபயோகிக்கும் நிலையில் உள்ளது. மீதமுள்ள 16 மினி வாட்டர் டேங்குகள் பயனற்ற நிலையில் உள்ளன. தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் 3 ஆவது இடத்தில் உள்ளது. எங்கள் ஊர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை, முழுமையாக நிறைவேற்ற லெப்பைகுடிக்காடு பேரூராட்சி நிர்வாகத் தினர் இன்று வரை திணறிக் கொண்டிருக் கின்றனர். தற்போது இந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டால் லெப்பைக்குடிக்காடு, பெண்ணகோணம், கீழக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் குடிநீர், பாசனத்துக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். நிலத்தடி நீர் ஆதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
அதோடு இத்திட்டம் அமைய உள்ள தலைமை நீரேற்றம் நிலைய பகுதியைச் சுற்றி யுள்ள கிராமங்களின் கழிவுநீரானது, பல ஆண்டுகளாக அவ்விடத்தில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த இடத்தில் கிடைக்கக் கூடிய நீரானது குடி நீருக்கு உகந்ததல்ல. இப்பகுதி மக்களுக்கு பலனளிக்காத இத்திட்டத்தினால், பொது மக்களின் பணம் ரூ.22.8 கோடி வீணாகிவிடும். எனவே கீழக்குடிக்காடு கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத் துக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை வேறு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர். முன்னதாக லெப்பைக்குடிகாடு, பெண்ண கோணம், கீழக்குடிக்காடு நீராதார பாது காப்புக் குழு சார்பில் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தலை மையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.