districts

img

பாலியல் வன்கொடுமை வழக்கை முறையாக விசாரிக்க கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இளம் பெண் வன்கொடுமை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு, விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகில் உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த, பட்டதாரி இளம் பெண் நித்யா என்பவர் கடந்த 11.3.2023 அன்று அருகில் உள்ள கிராமத்தில் ஆடு மேய்க்க சென்ற பொழுது, மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.. மேலும் இந்த சம்பவமானது நாமக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள கரும்பு வெட்டும் வேலைக்கு வந்த கரூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இந்த செயலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு  செய்தனர்.சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் நித்தியாவை கண்டதும் தனக்கு சபலம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் ஆடுமேய்க்கும் பகுதியில் யாரும் இல்லாத நேரத்தில், திட்டமிட்டு அவரை வல்லுறவு செய்து கொன்று விட்டு பிறகு நகைகளை எடுத்துக்கொண்டு சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சிறுவன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நித்தியாவின் குடும்பத்தார் ஒரு சிறுவன் இவ்வளவு பெரிய செயலை செய்திருக்க முடியாது எனவே போலீசார் உண்மை குற்றவாளிகளை மறைக்கின்றனர்...
 இந்த பாலியல் வன்கொடுமை கொலை குறித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும், மேலும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஜேடர்பாளையம் நான்கு ரோடு பகுதியில், திங்கள் அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
 வயல்வெளிகளில் விவசாய பணிகள் ஈடுபடும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்