நாகப்பட்டினம், ஜன.3 - நாகப்பட்டினம் மாவட் டம் தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் கொத்தங்குடி ஊராட்சியில் வீட்டுமனை பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை பட்டா வழங்க வேண் டும். புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்து மக்க ளின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு செல்கிற சாலையை செப்ப னிட வேண்டும். குளங்களில் பரவி இருக் கிற ஆகாயத்தாமரை பாசி களை அகற்ற வேண்டும். ஊராட்சிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்தி போக்குவரத் திற்கு ஏதுவாக அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா தலைமையில் உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. போராட் டத்தை சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வேணு, வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் டி.அருள்தாஸ், மாண வர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.ஜோதிபாசு உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். கொத்தங்குடி, ஐயூர், தொழுதூர் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் பங் கேற்றனர்.