மதுரை, ஜூன் 23- தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர் களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதி யம் வழங்கிட வேண்டும். துறை அமைச்சர் அலுவலக சிபாரிசுகள் பேரில் வழங்கப்பட்டுள்ள முறைகேடான பணி யிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்து வெளிப்படையான பொது பணியிடமாறு தலை அமல்படுத்த வேண்டும். கடை ஊழியர்களை மிரட்டும் துறை அமைச் சரது ஏஜெண்ட்கள் மீது கடும் நட வடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலி யுறுத்தி மதுரை டாஸ்மாக் மண்டல அலு வலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார் பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வியா ழனன்று நடைபெற்றது. சிஐடியு மாநில துணை பொதுச் செய லாளர் சரவணபெருமாள் தலைமை வகித்தார். தொழிற் சங்க நிர்வாகிகள் டியூசிசி எம். பி. வடிவேல், டிசிடிஇயூ எஸ். மணவாளன், ஏஐசிசிடியூ எஸ். வேல்முருகன், மதிவாணன், சிஐடியூ மாநில துணை பொதுச் செயலாளர் சி. வேல்முருகன், டிசிடிஇயூ மாநிலச் செய லாளர் ஜி. வி. ராஜா, டியூசிசி உக்கிர பாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார், சிஐடியூ மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ் நிறை வுரையாற்றினார், சிஐடியூ டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் சிவகுமார் நன்றி கூறினார், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வல்லர சன், பொன்ராஜ். சந்திரன், சிவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.