மதுரை, ஜன. 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு -1 பகுதி குழு சார்பில் மறைந்த மூத்த தோழர்கள் மைக் அழகர், எஸ்.ஞானம், கே.கருப் பன் ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சி வெள்ளியன்று மதிச்சி யத்தில் மாவட்டக் குழு உறுப்பி னர் டி.குமரவேல் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பகுதிக் குழு உறுப்பி னர்கள் என்.கணேசன், கே.கார்த் திக் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், தோழர் கள் மைக் அழகர், எஸ்.ஞானம், கே.கருப்பன் ஆகியோர் படங் களை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் மா.கணே சன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம. பால சுப்பிரமணிம் ஆகியோர் தோழர் கள் படத்திற்கு மாலை அணி வித்து புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பகுதி குழுச் செயலாளர் வி.கோட்டைச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ராதா, ஏ.பாலு, பகுதி குழு உறுப்பி னர் க.திலகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சிஐ டியு மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.