மதுரை, ஜூன் 11- சுமைப்பணியை காண்ட்ராக்ட் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கப்பலூரில் உள்ள தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கிட் டங்கி முன்பு தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கழகத்தின் பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் சுமைப்பணி தொழிலா ளர்கள் ஜூன் 11 அன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக்கழகத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் 40ஆண்டு களுக்கும் மேலாக சுமைப்பணி தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய் யப்படும் நெல்லை கிடங்குகளில் இறக்கி வைப்பதும் பின்னர் அரவை முகவர்களின்அரிசி ஆலைகளுக்கு நெல்லை ஏற்றிவிடுவதும். கிடங்கு களில் சேமிக்கப்படும் நெல்லை தார் பாய் கொண்டு மூடி வைப்பதும் அதை திறந்துவிடுவதும் இவர் களது பணியாகும். இதேபோல உணவுப்பொருள் சேமிப்பு கிட் டங்களிலும் சுமைப்பணி தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சுமைப்பணியை தமிழக அரசு அவுட்சோர்சிங் (ஒப்பந்த முறை) முறையில் காண்ட்ராக்ட் ஒப்பந்த காரர்களிடம் வழங்கிவிட்டது. இந்த முறையானது தொழிலாளர் களின் உழைப்பை கூலியை. சுரண்டுவதற்கு வழிவகை செய்து விடும்.
மேலும் இதுவரை அவர்கள் பெற்றுவந்த பண்டிகைகால பணப் பயன்கள் இனிமேல் வழங்கப் படாது. எனவே இந்த சுமைப்பணி யில் காண்ட்ராக்ட் முறையை புகுத் தக்கூடாது. அரசின் கட்டுப்பாட்டில் தொடரவேண்டும் என்று வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்க மண்டல தலைவர் கே.கதிரேசபாண்டியன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆர். புவ னேஸ்வரன், மாநில துணைத் தலை வர் கே.சண்முகம் ஆகியோர் பேசி னர். சிஐடியு மாநகர் மாவட்ட பொரு ளாளர் இரா.லெனின் ஆதரித்துப் பேசினார். இதில் நிர்வாகிகள் ஆர்.செல்லமணி, ஏ.சரவணகுமார்,, சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.சேதுராமன், ஏ. சௌந்தரபாண்டியன், வி.சிவமுரு கன் மற்றும் கே.ராமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள், துப்புரவு பணியா ளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக காண்ட்ராக்ட் விடுவதை கைவிட வில்லையெனில் தமிழகம் முழு வதும் தொழிலாளர்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத் தில் ஈடுபடப் போவதாக ஆர்ப்பாட் டத்தில் பேசிய தலைவர்கள் தெரி வித்தனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் மொத்தம் 5 கிட்டங்கிகள் உள் ளன. இதில் கப்பலூரில் உள்ள கிட் டங்கியில் 120 தொழிலாளர்கள் வரை பருவகால பணியாளர் களாக பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் தற்போது அரசு அனைவரையும் ஒப்பந்த முறையில் காண்ட்ராக்ட் வசம் தாரைவார்த்து வருகிறது. அப்படி மாற்றப்பட்டால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். உதரணமாக பருவ கால பணியாளர்கள் என்று சொல்லி கொண்டாலும் நாங்கள் வருடம் முழுவதும் பணியாற்றுவோம். மதுரை மாவட்டத்தில் மட்டும் கப்ப லூர், மேலக்குயில்குடி, வாடிப் பட்டி, திருவாதவூர், இடையப் பட்டி உட்பட நவீன அரிசி ஆலை (கடச்சனேந்தல்) உள்ளிட்ட இடங்க ளில் பருவகால சுமை பணி தொழிலா ளர்கள் பனி புரிந்து வருகின்றனர். எங்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், எது வும் கிடையாது, எங்ககளின் வேலைக்கு கூலி என்பது, 1 டன்னுக்கு ரூ.30 வழங்கப் படுகிறது. ஒரு நாளைக்கு 500 டன் ஏற்ற வேண்டுமெனில் சுமார் அறுபது பேர் ஒரு செட்டுக்கு பத்து பேர் வீதம் பணிபுரியவேண்டும். ரூ.15ஆயிரம் வரும். அதனை அறு பது பேருக்கு பகிர்ந்தால் ஒரு நப ருக்கு ரூ.250 தான் கூலி வருகிறது. இதுதான் எங்களின் வருமானம் என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.