districts

img

மீனாட்சி அம்மன் கோவில் சீரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்

மதுரை, ஜூன் 14-  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சீர மைக்கப்பட்டு வரும் வீர வசந்த ராய மண்டபம் பணி களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.   வீரவசந்த ராயர் மண்டபம் கடந்த 2018 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டு கடும் சேதம் ஏற்  பட்டது. தொடர்ந்து  அவற்றை சீரமைக்கும் பணி யினை ஜூன் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்தநிலையில் வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திங்களன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு பணி கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பணி களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் புது  மண்டபத்தை பார்வையிட்டு அங்குள்ள அகழி யில் பாரம்பரிய முறைப்படி நீர் நிரப்புவதற்கு தேவையான பணிகளையும் சேதமடைந்துள்ள சிலைகள் மற்றும் தலங்களை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைக்கும் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் சீர மைப்பு பணிகளுக்கு 3 ஆயிரம் கற்கள் தேவைப்  படுகிறது. இதுவரை 28 கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 200 கற்கள் வந்துவிடும். சீரமைப்பு பணிகள் பத்து நாட்களில் தொடங்கிவிடும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி,  மு. பூமிநாதன் ,மேயர் வா. இந்திராணி, மாவட்ட  ஆட்சியர் எஸ். அனிஷ்சேகர், கோவில் அறங்காவ லர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.