மதுரை, பிப்.6- தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மதுரை மாந கர் மாவட்டக் குழு சார்பில் சனிக் கிழமையன்று மீனாட்சி பஜார் தபால் நிலையம் எதிரில் மாவட் டச் செயலாளர் எஸ்.வேல்தேவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலை வர் கண்ணன், மாவட்டத் தலை வர் க.பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டேவிட், சக்தி, தீளன், ராதேஷ், இளங்கோ பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாநில துணைத் தலைவர் கண்ணன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில், ஆளுநர் செயல்பட்டு வரு கிறார். நீட் தேர்வால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை நிகழ்வு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தி வருகிறது. நீட் தேர்வு மசோ தாவை திருப்பி அனுப்பி தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். கொலைகார நீட் தேர்வை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். பிப்ரவரி 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாணவர்களையும் திரட்டி சென் னையில் மிகப் பெரிய உண்ணா விரதப் போராட்டத்தை நடத்த வுள்ளோம் என்று தெரிவித்தார்.