மதுரை, ஜூன் 9- தமிழகத்தின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையம், கட்ட மைப்புக்காகவும் சுத்தத்துக்காகவும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற முதல் பேருந்து நிலையம், ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகளும், சுமார் லட்சம் மக்க ளும் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலை யத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு மொத்தம் எட்டு நடைமேடைகள் உள் ளன. 60 வழித்தடங்களில் பேருந்து கள் இயக்கப்படுகின்றன. தவிர கர் நாடகம், கேரள மாநிலப் பேருந்து களும் வந்து செல்கின்றன. 1999-2000-ஆம் ஆண்டில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. பேருந்து நிலையம் கட்டப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை யின் மேல்பகுதி இடிந்து விழுந்துள் ளது. என்னையும் கவனி என்பதை கட்டுமானம் வெளிப்படுத்தியுள்ளது. இது ஒன்றும் முதல் சம்பவம் அல்ல. 2016-ஆம் ஆண்டு கடைசியில் அல்லது 2017-ஆம் ஆண்டு தொடக் கத்தில் நிகழ்ந்தது. பேருந்து நிலை யத்தின் கான்கிரீட் சீலிங் பூச்சு பெயர்ந்து அரசுப் போக்குவரத்து கழக புக்கிங் கவுண்டரில் விழுந் தது. நல்ல வேளையாக அங்கு ஆட் கள் நிற்கவில்லை.தற்போது நிகழ்ந் துள்ளது இரண்டாவது சம்பவமாகும். எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியின் மேற்கூரை யின் ஒரு பகுதி புதன்கிழமை விழுந்த தில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (37) என்பவர் .இவர் உடனடி யாக மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் நடந்ததாக கட்டடத்தின் அருகே உள்ள ஆவின் கடையில் பணியாற்றும் ஊழியர் தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளை பேருந்துகளில் ஏற்றிவிடும் முகவர் எம்.பாலா கூறு கையில், “விபத்தில் ஒருவர் காயம டைந்தார். இருசக்கர வாகனம் சேத மடைந்தது. ஒரு குழந்தையோ அல் லது ஒரு வயதானவரோ அந்த இடத் தில் இருந்திருந்தால், அவர்கள் கொடுங்காயங்களுக்கு ஆளாகியி ருப்பார்கள். கட்டடத்தை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேற்கூரை பல இடங்களில் உடைந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இடிபாடுகள் அகற்றப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு மக்கள் அந்த வழியாகச் செல்ல அனுமதிக் கப்பட்டனர். சம்பவத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கட்ட டத்தின் கீழ் பயணிகள் செல்வதைத் தடுக்க அப்பகுதிகளில் தடுப்பு அமைக்க வில்லை அல்லது கயிறுகள் கட் டப்படவில்லை. பின்னர் அந்த இடத்தில் கிடந்த இடிந்து விழுந்த கற்களை எதிரே உள்ள சாலையில் உள்ள ஒரு சில பள்ளங்களில் கொட் டினர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பேருந்து நிலையத்தை முழு மையாக பொறியாளர்களை கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, மோசமான பகுதி களை மீண்டும் மறு நிர்மாணம் செய் வது குறித்து பரிசீலிக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் உள்ள பழமை யான கட்டடங்களின் உரிமையா ளர்களுக்கு கட்டங்களை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டதாக மதுரை மாநகராட்சி அறிக்கை வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சம்ப வம் நடந்துள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 100 வார்டுகளிலும் வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட மொத்தம் 571 பழமையான கட்டடங்கள் கண்டறி யப்பட்டுள்ளன. வார்டு 1-இல் 99 கட்ட டங்கள், வார்டு 2-இல் 148 கட்ட டங்கள், வார்டு 3- மற்றும் 4-இல் முறை யே 220 கட்டடங்கள் உள்ளன.
ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய மதுரை ஆட்சிய ராக இருந்த உ.சகாயம் மதுரை மாநக ரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை கோச்சடை லாரிகள் நிறுத்துமிடத்திற்கு மாற்றம் செய்ய லாம் என்ற கருத்தை முன்வைத்தார். இது குறித்து போக்குவரத்து மேம் பாடு சம்பந்தமான கூட்டத்திலும் கருத்துக் கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் கோச் சடை லாரிகள் நிறுத்துமிடத்தை ஆய்வு செய்தனர். இந்தப் பணியை அப்போதே செய்திருந்தால் போக்கு வரத்து நெரிசல் மட்டுமல்ல விபத்தும் குறைந்திருக்கும். அந்த திட்டமும் கைவிடப்பட்டது. இப்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மதுரை நகரின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க ஆரப் பாளையம் பேருந்து நிலையத்தை கோச்சடைக்கு மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.