இராமநாதபுரம், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநிலஅரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி யும் மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக, வியாழனன்று இராமநாத புரத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கல்யாணசுந்த ரம், எம்.பாலமுருகன் ஆகி யோர் தலைமையில் பேரா வூரிலிருந்து துவங்கி புள் ளங்குடி, தெற்குபெருவயல், பெருவயல், பூத்தோண்டி, கலையனூர், மாதவனூர், கழனிகுடி, தேவிபட்டினம் ஆகிய இடங்களில் இரு சக்கர வாகன பிரச்சார இயக் கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. கண்ணகி துவக்க உரை யாற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் நா.கலை யரசன் நிறைவுரையாற்றி னார். தாலுகாச் செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. செல்வராஜ், டி.முத்துப் பாண்டி, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாவட்டச் செய லாளர் வான்தமிழ் இளம் பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சாயல்குடியில் கடலாடி மேற்கு தாலுகாச் செயலா ளர் எஸ்.தங்கச்சாமி தலை மையில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாகணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழக்கரையில் தாலுகாச் செயலாளர் முருகேசன் தலைமையில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர். குருவேல், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜ் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.