தாழ்ந்துபோகும் கட்டிடங்கள். திடீர் திடீரென்று பூமியில் தோன்றும் பள்ளங்கள். பூமிக்கடியில் புதைந்துகொண்டி ருக்கும் நாட்டின் தலைநகரம். மேற்காசியாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள ஈரானின் தலைநகரத்தில்தான் இதெல்லாம் சம்பவிக் கின்றன. டெஹ்ரான் நகரத்தில் பல இடங்களிலும் இப்போது திடீர் பள்ளங்கள் ஏற்படுகின்றன. மண் இடிந்துவிழுவதும், கட்டிடங்கள் தாழ்ந்துபோவ தும் இங்கு சர்வசாதாரணம். காரணம் என்ன?
மனிதன் வெட்டிய குழிக்குள் மறைந்துகொண்டிருக்கும் தலைநகரம்
மிதமிஞ்சிய நீர்ச் சுரண்டலே இதற்குக் காரனம். திடீர்ப் பள்ளங்கள் (sinkholes)உருவாவது வாடிக்கையாக நடப்பதால் டெஹ்ரா னின் தெற்குப் பிரதேசத்தில் குடியிருந்தவர்கள் பலர் தங்கள் வீடு வாசல்களை விட்டுவிட்டு போய்விட்டனர். ஒன்றரைக் கோடி பேர் வாழும் ஈரானின் தலைநகரம் ஆண்டுதோறும் 25 செமீ வீதம் தாழ்ந்துகொண்டிருக்கிறது என்று 2018 ஆய்வுகள் கூறின. செயற்கைக்கோள் படங்கள், தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது தெரியவந்தது. ஜெர்மனி புவியியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் அன்று இது குறித்து ஆய்வு செய்தனர். இண்டர் பெரோமெட்ரிக் சிந்தெட்டிக் அப்பேச்சர் ரேடார் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் டெஹ்ரானில் ஏற்படும் பூமியின் சரிவு பற்றி கண்டறியப்பட்டது. இந்நகரத்தின் மூன்று பகுதிகளில் பூமி 25 செமீ அளவிற்கு தாழ்ந்துபோகிறது. டெஹ்ரான் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ள இடம் உட்பட பல இடங்கள் சராசரி 5 செமீ என்ற அளவில் மண்ணில் புதைந்துகொண்டிருக்கின்றன. இயற்கைவளங்களின் அளவிற்கு மீறிய சுரண்டல், அளவுக்கு அதிகமான கட்டிடங்கள், கட்டுக்கடங்காத மக்கட்தொகைப் பெருக்கம் ஆகியவற்றின் சுமை தாங்கமுடியாமல் இது நிகழ்கிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. நகரத்துடன் சேர்ந்துள்ள தொழிற்சாலை களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வும் இதற்குக் காரணமாக அமைந்துள்லது. நிலத்தடி நீர் பெருமளவில் சுரண்டி எடுக்கப்படுவதால் பூமிக்கடியில் இருக்கும் மண் கீழ்நோக்கி இடிந்துகொண்டிருக்கிறது. உலகில் இதுவரை நடந்துள்ளவற்றில் டெஹ்ரான் சம்பவங்களே மிக மோசமானவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உலகில் வேறெங்கும் இந்த அளவு வேகமாக இடங்கள் பூமிக்கடியில் புதையுண்டு போகவில்லை என்று ஸ்பெயின் அலிசாண்ட்ரே பல்கலைக்கழக பொறியியல் ஆய்வாளர் ரோபோர்ட்டோ டோமஸ் கூறுகிறார்.
கிணறுகளும் அணைக்கட்டுகளும்
டெஹ்ரானில் மட்டும் சுமார் 32,000 கிணறுகள் உள்ளன என்று 2012இல் நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் தெரியவந்தது. 1968ல் இவற்றின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டுமே. இது தவிர அணைக்கட்டுகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததும் நீரளவு குறையக் காரணம். நாட்டின் பல இடங்களிலும் அதிக எண்ணிக்கை யில் கட்டப்பட்ட அணைக்கட்டுகள் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்றுசேரும் நீரின் அளவை வெகுவாகப் பாதித்தது. இதனால் பூமிக்கடியில் இருந்து சுரண்டி எடுக்கப்படும் நீருக்குப்பதில் நீர் திரும்ப பூமிக்கு அடியில் சென்றுசேரமுடியாமல் போனது. 1984-2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் டெஹ்ரானில் நிலத்தடி நீரளவு 12 மீட்டர் தாழ்ந்துபோனது. இது நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் கீழ் நோக்கி இழுத்துச்சென்றதுடன் வேறு பல பேரிடர்களையும் ஏற்படுத்துகிறது. கட்டிடங்கள் இடிந்துவிழுகின்றன. பல இடங்களில்வாய் பிளந்து நிற்கும் திடீர் பள்ளங் கள் தோன்றுகின்றன. சுவர்களில் விரிசல்கள். இவையெல்லாம் டெஹ்ரானில் இப்போது சர்வ சாதாரணம். பொழியும் மழைநீரை அமுதமாகக் கருதி சேமிக்காமல் அலட்சியப்படுத்தும் நமக்கும் நாளை இதேநிலை ஏற்படலாம்.