districts

காந்தி குறித்து அவதூறு பதிவிட்டவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை,செப்.6- முகநூலில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘கல்யாணசுந்தரம் என்ற பெயரில் முகநூலில் மகாத்மா காந்தியைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டும், காந்தியின் புகைப்படத்தை தவறாக சித்தரிக்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சியின் மாநிலச் செயலாளர் வேல்முருகன் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கல்யாணசுந்தரம், மதுரை  மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை மாவட்ட  முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன்பு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.  விசாரணை முடிவில், “மனுதாரர் மீதான குற்றத்தின் தீவிரத் தன்மை, விசாரணை நிலுவையில் இருப்பது, மனுதார ருக்கு எதிரான கடும் ஆட்சேபனைகள் உள்ளிட்ட வற்றைக் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு  முன்ஜாமீன்  அளிக்க முன்வர வில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.