districts

img

பழமையான  கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, அக். 26- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் மதகொண்டப்பள்ளி யில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட 4 கல் தூண்கள் கிராம மக்கள் உதவி யுடன் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த நான்கு தூண்களில் இரண்டு ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனுடைய கல்வெட்டாகும். இந்த கல்வெட்டு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறுகையில், “ஓசூ ருக்கு முரைசூர் நாடு என்ற பெயர் இந்த கல்வெட்டில்தான் முதன்முதலாக வருகிறது. இதுவரை 13ஆம் நூற்றாண்டில் தான் முரசுநாடு என்ற பெயர் வந்ததாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஓசூர், முரசுநாடு என்று அழைக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு வெளிப்படுத்தியுள்ளது”என்றார்.