districts

img

விடுதி வசதியில்லாமல் அவதிப்படும் தலித் மாணவிகள் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மாதர் சங்கம் புகார்

கிருஷ்ணகிரி, ஜன. 25- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 5 கலை, அறிவியல் கல்லூரி, 3 தொழில் நுட்பக் கல்லூரி ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரிகளில் தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திரு வண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20,000 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டியல் மற்றும் பழங்குடி மாண வர்கள். இதில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கல்லூரியில் சேர்ந்து பயில்கின்றனர்.  அரசு விடுதிகளில் தங்கி படிக்கலாம் என இங்கு சேரும் மாணவிளுக்கு போதிய விடுதி வசதி இல்லாததால் தினசரி 100 ரூபாய் வரை போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. இது பெரும்பாலான மாணவிகளின் இடை நிற்றலுக்கு காரணமாக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலித், பழங்குடி மாணவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் விண்ணப்பித்தும் விடுதி கிடைக்காததால், விடுதி வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டு உடனடியாக மாண வர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி னர்.

அதனடிப்படையில் அந்த மாணவி களுக்கும் விடுதி வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது “உணவுக்கான செலவினங்கள் செய்ய முடியாது, நீங்களே சொந்த செலவில் உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்” என்று விடுதி நிர்வாகம் திடீரென கை விரித்துள்ளது.   உணவுக்கான செலவினங்கள் செய்ய இயலாத நிலை உள்ளதால் தொடர்ந்து கல்லூரிக்கு செல்வதும், படிப்பை தொடர்வதும் மாணவிகளுக்கு கேள்விக் குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், மாணவிகளின் படிப்பு முடியும் வரை பர்கூர் பகுதியில் உடனடியாக அரசு இலவச விடுதி வசதி ஏற்படுத்த வேண்டும், மாவட்டம் முழுவதும் தலித் பழங்குடியின மாண வர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய விடுதிகள் கட்ட வேண்டும் என்று வலி யுறுத்தியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து அரசின் இலவச விடுதிகளில் உணவுடன் தங்கி படிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார். மேலும் தேவைக்கேற்ப விடுதி வசதிகள் ஏற்படுத்தி தர அரசுக்கு கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.