கரூர், ஜூலை 27 - கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் முத்தனூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் அமையவுள்ள தனியார் செங்கல் சூளைக்கு அனுமதி வழங்கக் கூடாது என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அம்மனுவில், “கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் கோம்புபாளையம் ஊரா ட்சிக்கு உட்பட்ட முத்தனூர் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடி யிருப்பு அருகில் செங்கல் சூளை அமைக்க தனிநபர் முயற்சித்து வரு கிறார். இப்பகுதியில் செங்கல் சூளை அமைத்தால் புகை, அதிக வெப்பம் ஏற்ப டும். இதனால் காற்று மாசு ஏற்பட்டு பெண்கள், நோயாளிகள், குழந்தை களுக்கு கடுமையான சுவாசப் பிரச்ச னைகள் ஏற்படும். எனவே குடியிருப்பு பகுதியில் செங்கல் சூளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முத்தனூர் கிராம பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். 2 நாட்க ளுக்கு முன்பு தனியார் செங்கல் சூளை உரிமையாளர் வழக்கறிஞர்களை அழைத்து வந்து, காவல்துறையினர் முன்பு, செங்கல் சூளை அமைப்பதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்து சிறையில் அடைப்பேன் என பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு வன்மையாக கண்டிப்பதுடன், குடி யிருப்பு பகுதியில் செங்கல் சூளை அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றிய குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், ஊர் பொதுமக்கள் கரூர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு வழங்கினர். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சரவணன் உடனிருந்தார்.