districts

img

தேசிய சிபிஎஸ்இ ஏரோபிக்ஸ் போட்டி கரூர் பரணி வித்யாலயா பள்ளி வெண்கலம் வென்று சாதனை

கரூர், ஜன.10- மகாராஷ்ட்ரா மாநிலம் ஷீரடியில் ஜனவரி 5,6,7 தேதி களில் தேசிய சி.பி.எஸ்.இ. ஏரோபிக்ஸ் போட்டிகள் நடை பெற்றன. தேசிய இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பாக  விளையாடிய கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணி தேசிய அளவில் வெண்கலம் வென்றது.  தேசிய அளவில் வெண்கலம் வென்ற கரூர் பரணி வித்யாலயா ஏரோபிக்ஸ் அணியினருக்கு வெற்றிச் சான்றி தழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டது. ஆசிய  ஏரோபிக்ஸ் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் சந்தோஷ் தேஷ்முக், இந்திய ஏரோபிக்ஸ் சங்க பொதுச்  செயலாளர் சந்தோஸ், மகாராஷ்ட்ரா மாநில அனைத்து சஞ்சீவானி கல்வி நிறுவனங்களின் தலைமை தொழில் நுட்ப அதிகாரி விஜய் நாயுடு, ஷீரடி சஞ்சீவானி சர்வ தேசப் பள்ளி முதல்வர் சுதா சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றிச் சான்றிதழ் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.  கரூர் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், ஏரோபிக்ஸ் விளை யாட்டு அணியினர், உடற்கல்வி ஆசிரியர் சுகன்யா, தமிழ்நாடு மூத்த ஏரோபிக்ஸ் நடுவர், பயிற்சியாளர் சிவகாமி மற்றும் தேசிய ஏரோபிக்ஸ் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். தேசிய அளவில் வெண்கலம் வென்று கரூருக்கும்  தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள பள்ளியின் ஏரோ பிக்ஸ் விளையாட்டு அணி மற்றும் பயிற்சியாளர்களை தாளாளர் எஸ்.மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷனி, முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா மற்றும் இருபால் ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டி னர்.