districts

img

டிஎன்பிஎல் காகித ஆலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.27 - கரூர் மாவட்டம் தோகைமலை அருகி லுள்ள மொண்டிப்பட்டியில் செயல்படும் புகளூர் காகித ஆலையின் இரண்டாவது யூனிட்டில் உற்பத்தி பணிகள் துவங்கி ஆறு  ஆண்டுகளாகியும், இங்கு வேலை செய்து வரும் ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கு கட்டப்பட்ட பள்ளி இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.  இந்த பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற் போல்   குடியிருப்புகளை கூடுதலாக  கட்ட வேண்டும். ஆலையின் உள்ளே தொழி லாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில்  கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை முறையாக செயல்படுத்தி பரா மரிப்பு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  ஆலையின் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அரவிந்த் தலைமை வகித்தார். சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.ஜீவானந்தம் கண்டன  உரையாற்றினார். புகளூர் நகராட்சி கவுன்சி லர் இந்துமதி, சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும்  மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.