கரூர், செப்.2 - கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட ஆண்டு பேரவை சங்கத் தின் மாவட்டக் குழு சார்பில் சுங்க கேட்டில் உள்ள சிஐடியு கூட்ட அரங்கில் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்ட துணைத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித் தார். கூட்டுறவு ஊழியர் சம்மேளனத் தின் மாநில உதவி பொதுச் செயலாளர் பி.கௌதமன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.மணியரசு வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ஆர்.கண்ணன் வரவு- செலவு அறிக்கையையும் முன்வைத்த னர். மாவட்டத்தின் புதிய தலைவராக கே.மணியரசு, செயலாளராக ஆர். கண்ணன், பொருளாளராக கே.சிவ சாமி, மாவட்ட துணைத் தலைவர்க ளாக கா.கந்தசாமி, கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர்களாக சித்ரா, மோகன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு தேர்தல் வாக்குறு திப்படி நியாய விலை கடைகளை ஒரே துறையில் கொண்டு வர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். ரேசன் பொருட்கள் விநியோகத்தில் பாக்கெட் முறையை அமல்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் அம்மா மருந்தகங்களில் நிரந்தரப் பணி யாளர்களை நியமிக்க வேண்டும்.
கரூர் மாநகராட்சியாக அறிவிக்கப் பட்ட நிலையில், மாநகராட்சிக்குரிய படிகளை உயர்த்தி வழங்க வேண்டும். கூட்டுறவு அச்சக ஊழியர் ஊதிய உயர்வில் உள்ள குளறுபடிகளை சீர் செய்து, அச்சக ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். பணி காலத்தில் உயிரிழந்து போன ஊழி யர்களுக்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சேர வேண்டிய தொகை முழுவதும் உடனடி யாக வழங்க வேண்டும். இந்த கோரிக் கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 26 ஆம் தேதி கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.