districts

img

அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆலோசனை

நாகர்கோவில் ,ஜன. 25 கன்னியாகுமரி மாவட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில்  அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களின் ஆலோ சனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி உறுதிமொழி ஏற்பது பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடக்கவிருக்கும் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது , மேலும் நகர் முழுவதும் 15 இடங்களில் ஆட்டோ சங்கம் சார்பில் தேசிய கொடியேற்றி உறுதி மொழி ஏற்பது, பிப்ரவரி 4ம் தேதி மாவட்ட ஆட்சி யரிடம்  வேலை நிறுத்த மனு அளிப்பது என முடிவு செய்யபட்டது. இந்த கூட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட நிர்வாகி ஜலீல் தலைமை வகித்தார். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ். அந்தோணி,  மாவட்ட செயலளார் கே. தங்க மோகனன், மாவட்ட குழு உறுப்பினர் வி.மாணிக்கவாசகம்,  மாவட்ட நிர்வாகி  ஏ டி. மோகன், எம்எல்எப் மாவட்ட செயலாளர்  சி. ஜெரால்டு, மாவட்ட நிர்வாகி நெல்சன், மாவட்ட தலைவர் சி. ஞானதாஸ், மாவட்ட நிர்வாகி பெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.