கள்ளக்குறிச்சி, ஜன.5- கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் ஒன்றியம், உ.செல்லூர் தலித் பகுதி மக்கள் பகுதிநேரமாக நியாயவிலைக் கடை அமைத்து கொடுக்க வேண்டி மனு கொடுத்தும் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனாலும், அதிகாரிகள் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் காத்தி ருக்கும் போராட்டத்தை அறிவித்த னர். அதன்படி, அரசு அலுவ லகம் முன்பு மதிய உணவு சமைத்து அங்கேயே உணவை மாறி னார். பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைதி பேச்சு நடத்தினர். இதில், தலித் மக்க ளின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் மிக விரைவில் பகுதி நேர கடை அமைத்துக் கொடுப்பதாக உறுதி யளித்தனர். இதனையத்து, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் கிளைச் செய லாளர்கள் ஆ.ஏழுமலை, சு.வீரன் ஆகியோர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.எம். ஜெய்சங்கர், சங்கத்தின் மாவட்டத் தலை வர்கள் சுப்பிரமணியன், அ.பா. பெரியசாமி, பூமாலை, மு. ஆனந்தராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்ட பலரும் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.