districts

img

சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி. பிப். 16- காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை, எளிய மக்கள் மனைகளை   பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழ்நாடு அரசின் இரு மொழி கொள்கைக்கு எதிரான மூன்றாவது மொழித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பதிவுத் துறைகளில் ஏற்கனவே தனியார் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்ய வேண்டும் அரசு நிறுவனங்களான என்.ஐ.சி, இ-லாட் மூலம் கணினி மயமாக்க வேண்டும், அரசாணை 81இன் படி பணியிடை நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலத் தலைவர் ஆ.சதீஷ் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் தா.மணிராஜ், மாவட்டச் செயலாளர் எல்.அனந்த கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் டி.கொளஞ்சி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.