districts

வாலிபர் கொலை: விசாரணை நடத்த சிபிஎம் கோரிக்கை

சிதம்பரம், ஏப்.30- சிதம்பரம் அடுத்த நஞ்ச மகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஐயப்பன்(23) திருமணமாகாதவர்.  கண்ணங்குடி கிராமத்தில் தனது பாட்டி ஜானகி யம்மாள் வீட்டில் கடந்த 20 ஆண்டு களாக தங்கியுள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை (ஏப்.30) தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த காவல்  துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடலூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பி னர் வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார் ஆகியோர் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில்,“ சிதம்பரம் டிஎஸ்பி தலைமையில் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.