districts

மயங்கி விழுந்த  மாணவன் பலி

சிதம்பரம், ஜன 23- சிதம்பரம் அருகே சிவபுரி கிராமத்தில் வசிப்பவர் இளங்கோவன். இவரது மகன் அரிஷ் ராகவேந்திரா (16), இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.